பித்த நீர் என்பது நமது சிறுகுடலின் செரிமானத்திற்கு உதவுகிறது. இது பொதுவாக கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகிறது. பித்த நீர் அதிகமா சுரப்பதையே நாம் பித்த நோய் என்கிறோம். பொதுவாக நாம் காலை உணவை புறக்கணித்தாலோ, நேரம் தவறி சாப்பிடுவதாலோ, அளவுக்கு அதிகமா டி குடிப்பதனால் பித்தம் அதிகமா வரும் என சொல்லுவார்கள். மேலும் மனக்குழப்பம் உள்ளவர்களுக்கு பித்த நீர் அதிகமாக சுரக்கும், இதனை தடுக்க சில பாட்டி வைத்தியம் உள்ளது அதனை காண்போமா !!!!
இயற்கை முறையிலான பித்தத்தை தணிக்கும் முறைகள்
- இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
- இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
- பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
- எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
- ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
- பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
- விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
- அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
- பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
- கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
- நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
- எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
- அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.
இம்முறையிலாக பித்தத்தை நாம் இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து குறைத்துக்கொள்ளலாம். மேலும் பலருக்கு இந்த முறைகளை தெரியப்படுத்தி பயன் பெற செய்யுங்கள்.
Comments
Post a Comment